தமிழீழ தேசியத்தலைவரின் மதிப்பை பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் தனது 80வது வயதில் இன்று இயற்கை எய்தி இருக்கிறார்.
தமிழீழத்தில் முதன் முதல் அகலத்திரைக் காவியமாக உருவாக்கப்பட்ட ஆணிவேர் என்ற படத்தினை இயக்கியவரும், நேரடியாகவே நின்று அதனை நெறிப்படுத்தியவரும், நிதர்சனம் நிறுவனத்தின் போராளிகள் பலரை திரைப்படத்துறை சார்ந்து கற்பித்துக்கொடுத்த ஒரு நல்லாசான் இன்று எம்மோடில்லை.
ஒரு நல்லாசானை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினரின் துன்பத்தில் தமிழீழ மக்கள் சார்பில் நாமும் பங்கு கொள்வதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

Comments